மதுரையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை கொள்ளை
மதுரை:
மதுரை வடக்கு ஆவணி மூலவீதி, நீலமேகம் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி மாலதி (வயது77). இவர் சம்பவத்தன்று வெளியூர் சென்று விட்டு அரசு பஸ்சில் மதுரைக்கு வந்தார்.
எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் அருகே வந்த போது மாலதி அருகே நின்ற மர்ம நபர்கள் நைசாக அவரது கைப்பையை திருடிக் கொண்டு தப்பினர். அதில் 6 பவுன் நகை இருந்தது.
பஸ் நிலையம் வந்து இறங்கிய மாலதி நகை இருந்த பை திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை தெற்கு வெளிவீதி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் குருபாலன். இவரது மனைவி சுதா (21). இவர் நேற்று மாலை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் வேங்கடேச பெருமாள் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுதா கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.