உள்ளூர் செய்திகள்
சிவகங்ககை அருகே உள்ள தட்டட்டி ஊராட்சியில் கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் தட்டட்டி ஊராட்சியிக்கு உட்பட்ட கொரட்டி, தட்டட்டி, துலாவூர் ஆகிய பகுதியச் சேர்ந்த கிராம மக்களுக்கான கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
வட்டாட்சியர் வெங்க டேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோரின் ஆலோசனை யின்படி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இந்த முகாம் நடந்தது.
இதில் இலவச பட்டா, பட்டா மாறுதல்,கணினி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளாக 12 மனுக்கள் பெறப்பட்டன. அதில் உடனடியாக 3 மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் நேரடியாக விசாரணை நடத்தி அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் உமா, வார்டு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர் அங்காள ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் முத்துகிளி, ஆலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.