ஆன்மிகம்
நாகை பகுதி சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று பங்குனிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்திநாதேஸ்வரர் கோவில் வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், தகட்டூரில் உள்ள பைரவர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்திநாதேஸ்வரர் கோவில் வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், தகட்டூரில் உள்ள பைரவர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.