உள்ளூர் செய்திகள்
கார் மோதி நிற்கும் காட்சி.

குலசேகரம் அருகே மின் கம்பத்தில் மோதிய சொகுசு கார்: டிரைவர் காயம்

Published On 2022-01-13 10:09 GMT   |   Update On 2022-01-13 10:09 GMT
குலசேகரம் அருகே மின் கம்பத்தில் சொகுசு கார் மோதியது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.
நாகர்கோவில்:

தக்கலையில் இருந்து குலசேகரம் நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டு இருந்தது வெண்டலிகோடு அருகே சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற மின் கம்பத்தில் மோதியது இதில் மின் கம்பம் முறிந்தது.சொகுசு கார் ஒட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் இதனால் சுமார் 6 மணி நேரம் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது அதன் பிறகு மின்சார ஊழியர்கள் வந்து புதிய மின்கம்பம் நாட்டி மின்சார வினியோகத்தை சரி செய்தார்கள்.

கடந்த மாதம் தான் இந்த மின் கம்பத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மோதி விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News