விளையாட்டு
ஹர்பஜன் சிங்

ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளர் ஆகிறார் ஹர்பஜன் சிங்

Published On 2021-12-08 07:06 GMT   |   Update On 2021-12-08 07:06 GMT
ஹர்பஜன் சிங் ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஐ.பி.எல். போட்டியில் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடினார்.

தற்போது ஐ.பி.எல்.லில் விளையாடுவதில் இருந்தும் அவர் ஓய்வு பெற்று உள்ளார். 41 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் ஒருஅணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எந்த அணிக்கு ஆலோசகராக இருப்பார் என்பது தெரியவில்லை.

Tags:    

Similar News