ஆன்மிகம்
சிதம்பரம் சிவகங்கை குளத்தில் நடராஜருக்கு தீர்த்தவாரி

சிதம்பரம் சிவகங்கை குளத்தில் நடராஜருக்கு தீர்த்தவாரி

Published On 2021-01-29 04:45 GMT   |   Update On 2021-01-29 04:45 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடினார்கள்.
தைப்பூசத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவாக சென்று சிவகங்கை குளக்கரையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய சாமிகளும் குளக்கரையில் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடினார்கள்.

பின்னர் மேளதாளம் முழங்க பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஊர்வலமாக நடராஜர் சன்னதியை அடைந்தனர். தொடர்ந்து அங்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News