ஆன்மிகம்
ஊஞ்சல் உற்சவத்தில் கோட்டை மாரியம்மன்

மாசி திருவிழா: ஊஞ்சல் உற்சவத்தில் கோட்டை மாரியம்மன்

Published On 2021-03-02 01:56 GMT   |   Update On 2021-03-02 01:56 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி பூத்த மலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று காலையில் கொடி இறக்கம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணி அளவில் பால், பன்னீர், திருமஞ்சனம் உட்பட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அதன்பிறகு மாலை 6 மணியளவில் அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி ஊஞ்சலில் அமர்ந்து இருந்தபடி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி திருவிழாவின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் லட்சுமி அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News