உள்ளூர் செய்திகள்
சிறுவர்கள்

சிறுவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2022-01-13 09:34 GMT   |   Update On 2022-01-13 09:34 GMT
காரைக்குடி பகுதியில் சிறுவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்பேரில் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ராஜ்குமார் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா, சிவகங்கை, முத்திரை ஆய்வாளர் ராம்மோகன், காரைக்குடி, முத்திரை ஆய்வாளர் கதிரவன், சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிரியதர்சினி, ஐ.ஆர்,சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஜீவானந்தம், மனிதம் சாரி டபிள் டிரஸ்ட் இயக்குநர் வனராஜன், மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப் பினர் ரசீந்திர குமார் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மணிமேகலை, முத்துலட்சுமி, அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணன், தொழிலக பாதுகாப்பு இயக்கக உதவியாளர் ஜெய்சங்கர், சைல்டு லைன் உறுப்பினர்கள் கார்த்திகேயன்,  சரவணன் ஆகியோர் அடங்கிய மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, புதுவயல் பகுதிகளில் உள்ள கடைநிறுவனங்கள் மற்றும் அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.  

இந்த ஆய்வில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள்  கண்டறி யப்படவில்லை. மேலும் 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய 4 கடை நிறுவனங்கள் மற்றும் 1 அரிசி ஆலை ஆகிய 5 நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய 12 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அவற்றில் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 14 வயதிற் குட்பட்ட குழந்தைத் தொழிலாளியை பணிக்கமர்த்திய கடை நிறுவன உரிமை யாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் மற்ற நீதிமன்றங்களில் 11 வழக்குகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 14 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கமர்த்திய 21 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது மாவட்ட குற்றவியல் நடுவர்  மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டரால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  4 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால், கீழ்க்கண்ட இணையதள முகவரி, தொலைபேசி எண் மற்றும் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு தெரிவிககலாம்

pencil.gov.in  என்ற இணையதளத்திலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந் திட்ட வளாகம், அரசினிப் பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை 04575-240521 என்ற முகவரியிலும், இலவச தொலைபேசி எண் 1098-லும் தெரிவிக்கலாம்
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை தொழி லாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News