செய்திகள்
நிவர் புயல்

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை

Published On 2020-11-25 20:13 GMT   |   Update On 2020-11-25 20:13 GMT
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.
சென்னை:


வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.

அதிதீவிர நிவர் புயல் வங்கக்கடலில் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

அதேபோல் புயல் சென்னையில் இருந்து தெற்கே-தென்மேற்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புயலின் மையப்பகுதி கரையை கடக்கத்தொடங்கியுள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. 
Tags:    

Similar News