செய்திகள்
தற்கொலை

வி.கே.புரம் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை

Published On 2021-09-16 11:29 GMT   |   Update On 2021-09-16 11:29 GMT
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

சென்னை அருகே உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சப்பா. இவரது மனைவி பிரேமா (வயது 55).

இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாங்காட்டில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு, வி.கே.புரம் அருகே உள்ள பொத்தையடிக்கு குடிபெயர்ந்தனர்.

இங்கு ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பிரேமா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர்களது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விட்டதாகவும், இதனால் மனமுடைந்து லட்சப்பா, பிரேமா ஆகியோர் சென்னையில் இருந்து இங்கு குடிவந்தது தெரியவந்தது.

இங்கு வந்த பிறகும் பிரேமா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News