செய்திகள்
விஷம்

ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-11-22 05:33 GMT   |   Update On 2021-11-22 05:33 GMT
அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஓய்வுபெற்ற தபால் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:

நெல்லை மாவட்டம் மதிவண்ணபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை பார்க் டவுன் தெருவில் குடியிருக்கும் மகளை பார்ப்பதற்காக வந்திருந்தார். சுப்பிரமணியனுக்கு நீரிழிவு நோய் உள்ளது. எனவே அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர், மகள் வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News