செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகள் தேர்வு பணிகள் தீவிரம்
பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்கள் குடியேறுவதற்கு முன் அவை சரி செய்யப்படும்.
அவிநாசி:
அவிநாசி சூளையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறது.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப்பணி செய்த கான்டிராக்டர்கள் குடியிருப்புகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில்:
சில இடங்களில் பூசப்பட்டுள்ள வர்ணம், சுண்ணாம்பு நிறம் மங்கியுள்ளது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்கள் குடியேறுவதற்கு முன் அவை சரி செய்யப்படும். பயனாளிகள் நல்ல முறையில் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் என்றனர்.