செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி

Published On 2021-07-17 10:56 GMT   |   Update On 2021-07-17 10:56 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 52 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில், கூட்டம் அலைமோதியதால் டோக்கன் கொடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News