ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாடவீதிகளில் மலையப்பசாமி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாடவீதிகளில் மலையப்பசாமி உலா

Published On 2021-10-21 05:40 GMT   |   Update On 2021-10-21 05:40 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் 9 மணிவரை கருட சேவை (தங்கக் கருட வாகன வீதி உலா) நடந்தது.

உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News