செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுவையில் ஒரே நாளில் 151 பேருக்கு கொரோனா

Published On 2021-08-19 02:35 GMT   |   Update On 2021-08-19 02:35 GMT
புதுவையில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 151 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 169 பேர், வீடுகளில் 764 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 74 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை.

புதுவையில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 2 பேர், பொதுமக்கள் 2 ஆயிரத்து 194 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரத்து 322 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த சில நாட்களாக 100-க்கு கீழ் கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 151 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கேரள மாநில பகுதியில் இருக்கும் மாகியில் மட்டும் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News