செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,008-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்த படியே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 296 குறைந்து ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ. 34 ஆயிரத்து 784-க்கும், ஒரு கிராம் ரூ. 4,348-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் இன்று உயர்வு காணப்பட்டது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ. 35,008-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ. 28 உயர்ந்து ரூ. 4,376 உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 73 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.80-க்கு விற்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ. 38 ஆயிரத்துக்கு விற்றது. பின்னர் விலையில் குறைவு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. நேற்று சுமார் 10 மாதங்களுக்கு பிறகு தங்கம் பவுன் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்த நிலையில் இன்று விலை உயர்ந்து மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்த படியே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 296 குறைந்து ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ. 34 ஆயிரத்து 784-க்கும், ஒரு கிராம் ரூ. 4,348-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் இன்று உயர்வு காணப்பட்டது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ. 35,008-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ. 28 உயர்ந்து ரூ. 4,376 உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 73 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.80-க்கு விற்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ. 38 ஆயிரத்துக்கு விற்றது. பின்னர் விலையில் குறைவு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. நேற்று சுமார் 10 மாதங்களுக்கு பிறகு தங்கம் பவுன் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்த நிலையில் இன்று விலை உயர்ந்து மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.