ஆன்மிகம்
முப்பந்தல் ஆலமூடு அம்மன்

முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா 26-ந் தேதி நடக்கிறது

Published On 2021-01-23 06:02 GMT   |   Update On 2021-01-23 06:02 GMT
ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புஷ்பாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புஷ்பாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மிர்துஞ்சயஹோமம், கலச பூசை, 9 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மனுக்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு ஆலமூடு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு சுமங்கலி பூஜை, அன்னதானம் நடைபெறும். 1 மணிக்கு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், 2 மணிக்கு ஊட்டுப்படைப்பும் நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், திருவிளக்கு பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம், 9 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசலம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News