செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24ந் தேதி சேலம் வருகிறார்

Published On 2021-01-22 09:36 GMT   |   Update On 2021-01-22 09:36 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி சேலம் வருகிறார்.
சேலம்:

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரசாரத்தில் இறங்கி விட்டன. அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி இரவு கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்குகிறார்.

பின்னர் 25-ந் தேதி காலை எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் அருகே கோனேரிப்பட்டியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அவர் மாலையில் அங்கு நடக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News