செய்திகள்
தற்கொலை

கல்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-25 12:32 GMT   |   Update On 2021-10-25 12:32 GMT
கல்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகள் கீர்த்தனா (வயது 22). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா பச்சம்பாக்கம் அடுத்த பசுவநத்தம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும் 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணிகண்டன் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கீர்த்தனாவிடம் கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் அடிக்கடி வரதட்சணை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார்.

மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராயப்பன் விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது தாயார் வசந்தா (50) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News