செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

கல்வராயன்மலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-03 08:57 GMT   |   Update On 2020-12-03 08:57 GMT
கல்வராயன் மலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கச்சிராயபாளையம்:

கல்வராயன் மலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மலைவாழ்மக்கள் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கல்வராயன்மலை தாலுகாவுக்குட்பட்ட ஆரம் பூண்டி கிராமத்தில் தனிநபரின் பட்டா வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட விவசாய நிலத்தில் உள்ள மா மரத்தில் மாங்காய்களை மர்மநபர்கள் திருடி சென்றதாகவும், இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குபதிவு செய்து மாங்காய் திருடி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்யாமல் விட்டு விட்டதை கண்டித்தும் பட்டா மாற்றம் செய்ய உடந்தையாக செயல்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ராஜா, துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News