செய்திகள்
விபத்து

சோழவரம் அருகே வாகனம் மோதி திருநங்கை பலி

Published On 2021-11-25 09:06 GMT   |   Update On 2021-11-25 09:06 GMT
சோழவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருநங்கை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

சோழவரம் அடுத்த பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுகந்தி (29). திருநங்கையான இவர் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் இருந்து பன்னீர்வாக்கம் செல்லும் சாலையில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News