ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் முருகப்பெருமான் சூரனின் தலையை கொய்த காட்சி.

ராமேசுவரம் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது: பக்தர்கள் தரிசனம்

Published On 2021-11-10 04:00 GMT   |   Update On 2021-11-10 04:00 GMT
ராமேசுவரம் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா பக்தி கோஷத்துடன் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 4-ந்தேதி அன்று கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதேபோல் ராமேசுவரம் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.

வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் கோவிலில் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை மண்டபம் எதிரே உள்ள பிரகாரத்தில் வேலால் சூரனின் தலையை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து சூரனை வதம் செய்த வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதை .தொடர்ந்து முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியானது கோவிலின் மேற்கு வாசல் ரத வீதி பகுதியில் வைத்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் கோவிலுக்குள்ளேயே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் பழனி குமார், பேஸ் கார்கள் முனியசாமி, ராமநாதன், கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்

இதேபோல் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலிலும், ராமநாதபுரம் ரணபலிமுருகன் கோவில், குண்டுக்கரை சாமிநாத சாமி கோவிலிலும் கோவிலின் உள்ளேயே வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதுபோல் இன்று(புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News