செய்திகள்
தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும்.
இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
10-ந்தேதி: நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
12, 13-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் வலங்கைமான் 5 சென்டி மீட்டர், திருபுவனம், ஆண்டிமடம் தலா 4 செ.மீ.யும் மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும்.
இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
10-ந்தேதி: நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
11-ந்தேதி: நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் வலங்கைமான் 5 சென்டி மீட்டர், திருபுவனம், ஆண்டிமடம் தலா 4 செ.மீ.யும் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... கொலை வழக்கில் கடலூர் எம்.பி.யை உடனே கைது செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்