செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 57 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 32 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையே புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 57 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.