செய்திகள்
சைலேந்திர பாபு

தமிழ்நாடு காவலர்களுக்கு வார விடுப்பு கட்டாயம்: சைலேந்திர பாபு

Published On 2021-07-30 16:06 GMT   |   Update On 2021-07-30 16:33 GMT
காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் இந்த உத்தரவை தவறாமல் செயல்படுத்த அறிவுறுத்தல்.
சென்னை:

டிஜிபி சைலேந்திர பாபு சுற்றிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில், அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.

ஓய்வு எடுக்காத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் இந்த உத்தரவை தவறாமல் செயல்படுத்த அறிவுறுத்தல்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News