செய்திகள்
சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலி
சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினராஜ் மகன் திராவிடதளபதி (வயது 25). இவர் கடந்த 16-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சுரண்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். சுரண்டை இலந்தைகுளம் அருகில் வரும்போது எதிரே வந்த பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட திராவிட தளபதி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த திராவிட தளபதியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திராவிட தளபதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.