செய்திகள்
ஆற்காட்டில் டெய்லர் தற்கொலை- போலீசார் விசாரணை
ஆற்காட்டில் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காய்க்காத தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). டெய்லர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனை மகேஸ்வரி தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மகேஸ்வரி தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்த்தபோது சரவணன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காய்க்காத தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). டெய்லர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனை மகேஸ்வரி தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மகேஸ்வரி தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்த்தபோது சரவணன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.