செய்திகள்
இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் ஊழியர்கள்

அதிரும் பிரேசில் - ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-29 01:18 GMT   |   Update On 2020-05-29 01:18 GMT
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Tags:    

Similar News