உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தனியார் தொழிற்சாலையில் காவலாளிகளை தாக்கிய கும்பல்

Published On 2022-01-28 04:18 GMT   |   Update On 2022-01-28 04:18 GMT
சேதராப்பட்டில் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்து காவலாளிகளை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

வானூர் அருகே பெரும்பாக்கம் ஏ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 55). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 
26-ந்தேதி இரவு இவரும், மற்றும் இவருடன் காவலாளியாக வேலை பார்க்கும் வானூரை சேர்ந்த பக்தவச்சலம் (57), கரசூரை சேர்ந்த கலியமூர்த்தி (63) ஆகியோரும் தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

நள்ளிரவு 11.45 மணி அளவில் தொழிற்சாலையில் திடீரென நாய் குரைக்கும் சத்தம் வந்தது. இதையடுத்து அர்ஜுனன், பக்தவச்சலம், கலியமூர்த்தி ஆகிய 3 பேரும் நாய் குரைக்கும் சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அங்கு பதுங்கி இருந்தது. 
அவர்களிடம் ஏன் இங்கு பதுங்கி இருக்கிறீர்கள்? என்று காவலாளிகள் 3 பேரும் கேட்டனர். அதற்கு நீங்கள் யார் எங்களை கேட்பது? என்று சொல்லி காவலாளிகள் 3 பேரையும் அங்கு கிடந்த சவுக்கு கம்பாலும், கையாலும் சரமாரியாக தாக்கினர். 

மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த அர்ஜுனன், பக்தவச்சலம், கலியமூர்த்தி ஆகிய 3 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர்   இதுகுறித்து அர்ஜுனன் சேதராப்பட்ட போலீசில் புகார் செய்தார். புகாரில் காவல் பணியில் ஈடுபட்ட தன்னையும், தன்னுடன் வேலை பார்க்கும் பக்தவச்சலம், கலியமூர்த்தி ஆகியோரை சேதராப்பட்டு குமரன் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (22), பண்ருட்டி கட்டியாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் (21), ராம்பாக்கத்தை சேர்ந்த சந்திரசேகரன் (23) மற்றும் விழுப்புரம் மேட்டுப் பாளையம் அண்ணா நகரை சேர்ந்த இளவரசன் (20) ஆகியோர் தங்களை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர் என்று குறிப்பிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News