ஆன்மிகம்
புரட்டாசி முதல் ஞாயிறு: வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் சென்றாய பெருமாள் கோவில் வீரபக்த ஆஞ்சநேயருக்கு புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில வீரபக்த ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.
இந்தநிலையில் புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.