செய்திகள்
கொள்ளை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூட்டிய வீட்டில் திருட்டு

Published On 2021-01-22 05:18 GMT   |   Update On 2021-01-22 05:18 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூட்டிய வீட்டில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் காமராஜ் (வயது 55). நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தோட்டத்தில் உள்ள வீட்டில் தூங்கச்சென்றார். அப்பொழுது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து பீரோவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இதுகுறித்து காமராஜ் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News