செய்திகள்
கோப்புபடம்

குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-06-11 15:37 GMT   |   Update On 2021-06-11 15:37 GMT
குடும்பத்தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், எஸ்.எஸ்.போஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 34), இவர் விலங்குகளை அழகுபடுத்தும் வேலையை வெளிநாட்டில் செய்து வந்தார். இவரது மனைவி நிமி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்தவர் இங்குள்ள விலங்குகளை அழகுபடுத்தும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த நிமி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீ பரவியதைடுத்து அலறினார்.

அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகினறனர்.

Tags:    

Similar News