செய்திகள்
ஜெ.அன்பழகனின் களப்பணிகள் நெஞ்சங்களில் இருக்கும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான ஜெ.அன்பழகனின் கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவை போற்றுவோம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ. அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்!
மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவை போற்றுவோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.