ஆன்மிகம்

லாஸ்பேட்டை திரவுபதி அம்மன்கோவிலில் பகாசூரன் கரிக்கோல பவனி விழா

Published On 2016-07-11 03:02 GMT   |   Update On 2016-07-11 03:02 GMT
லாஸ்பேட்டை திரவுபதி அம்மன்கோவிலில் பகாசூரன் கரிக்கோல பவனி விழா நேற்று நடந்தது.
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள திரவுபதி அம்மன்கோவிலுக்கு புதிதாக பகாசூரன் சிலை மற்றும் அன்ன வாகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை மற்றும் அன்ன வாகன பிரதிஷ்டை மற்றும் கரிக்கோல பவனி விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கரிக்கோல பவனியை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராமதாஸ், வீரபத்திரன், செல்வகணபதி, நேதாஜி, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News