செய்திகள்
மின்சார நிறுத்தம்

வாடிப்பட்டியில் 21-ந் தேதி மின்தடை

Published On 2021-10-19 18:04 GMT   |   Update On 2021-10-19 18:04 GMT
வாடிப்பட்டியில் 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரை:

வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், அய்யங்கோட்டை, சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன் கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டு நீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி.

சி.புதூர், ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, தனிச்சியம், மேலசின்னணம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரி‌ஷபம், நெடுங்குளம், எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டம்பட்டி மற்றும் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News