செய்திகள்
பல்கேரியாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து - 45 பேர் பரிதாப பலி
பல்கேரியா நாட்டில் தீப்பிடித்த சுற்றுலா பேருந்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சோபியா:
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து வடக்கு மாசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகருக்கு சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது.
பல்கேரியா நாட்டின் சோபியா நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பில் மோதி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உடல் கருகி பலியானார்கள்.
தீப்பிடித்த பேருந்தில் சிக்கியவர்களில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
விசாரணையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என தெரிய வந்தது.
இதையும் படியுங்கள்...ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா - பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது