உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-05-06 09:47 GMT   |   Update On 2022-05-06 09:47 GMT
ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (20-ந்தேதி) அன்றுகாலை 10 மணி அளவில் –ஈரோடு–கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.

எனவே இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது– கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என– கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News