செய்திகள்
மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
முகமது நபிகளின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகத்தின் எண்ணங்களான நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு அதிகரிக்கட்டும், சமுதாயத்தில் அமைதி நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.