உண்மை எது
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

Published On 2021-12-10 05:05 GMT   |   Update On 2021-12-10 05:05 GMT
குன்னூர் அருகில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து களத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பலத்தரப்பட்டோரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் விபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டு புகைப்படங்கள் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் எடுக்கப்பட்டதாக பகிரப்படுகின்றன.



வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை குன்னூர் விபத்தின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படங்கள் 2019 ஆண்டு பூன்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தின் போது எடுக்கப்பட்டவை ஆகும். இதே புகைப்படங்கள் முந்தைய விபத்துகளின் போதும் பகிரப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில், இணையத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் சமீபத்திய குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News