வழிபாடு
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில்

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் அமாவாசை கிரிவலம் இன்று நடக்கிறது

Published On 2021-12-03 06:06 GMT   |   Update On 2021-12-03 06:06 GMT
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் இன்று மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அமாவாசை கிரிவலம் போன்றவை நடைபெறும்.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி- சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறும். கொரோனா ஊடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த கிரிவலத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் அமாவாசை கிரிவலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அமாவாசை கிரிவலம் போன்றவை நடைபெறும்.
Tags:    

Similar News