ஆன்மிகம்

எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் விழா இன்று நடக்கிறது

Published On 2019-03-01 03:53 GMT   |   Update On 2019-03-01 03:53 GMT
எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனம் பூசும் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழா வருகிற 4-ந் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News