செய்திகள்
மரணம்

மதுரையில் மகன் கீழே தள்ளியதில் தந்தை மரணம்

Published On 2021-10-26 11:24 GMT   |   Update On 2021-10-26 11:24 GMT
மதுரையில் மகன் கீழே தள்ளியதில் காயம் அடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை:

மதுரை நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகரை சேர்ந்தவர் அண்ணா துரை, லோடுமேன். இவரது மகன் அரவிந்த் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் மதுரைக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தந்தை-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் தந்தையை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த அண்ணாதுரையை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அண்ணாதுரை மனைவி ஜெயமணி கொடுத்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News