செய்திகள்
சஸ்பெண்டு

வேலூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம்- ஆவின் பொதுமேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு

Published On 2020-12-26 07:12 GMT   |   Update On 2020-12-26 07:12 GMT
வேலூரில் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் பொதுமேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்:

வேலூர் ஆவின் மேலாளர் ரவி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மினிவேன் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யபட்டார். வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56 )கூறியதன் பேரில் லஞ்சப்பணம் கேட்டதாக ரவி தெரிவித்தார்.

பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஆவின் பொது மேலாளராக பணியாற்றிய கணேசாவை கைது செய்தனர். இருவரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவின் பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News