செய்திகள்
நாமக்கல்லில் நாளை மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல்லில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.