செய்திகள்
போலீசார் விசாரணை

மதுக்கூர் அருகே பள்ளி மாணவிகள் 2 பேர் கடத்தல்?- போலீசார் விசாரணை

Published On 2020-09-16 09:33 GMT   |   Update On 2020-09-16 09:33 GMT
மதுக்கூர் அருகே பள்ளி மாணவிகள் 2 பேரும் கடத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் நேற்று முன்தினம் மதுக்கூரில் உள்ள வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவிகளை காணவில்லை. இதுதொடர்பாக 2 மாணவிகளின் பெற்றோரும் மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் 2 பேரும் கடத்தி செல்லப்பட்டனரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News