செய்திகள்
கொரோனா பரவல் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடு வேகமாக பரவிவருவது கவலை அளிக்கிறது - ஸ்டாலின்
கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் படுவேகமாக பரவி வருவது கவலையடைச் செய்கிறது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் செய்தியில், கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் படுவேகமாக பரவி வருவது கவலையடையச் செய்கிறது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.