செய்திகள்
போலீசார் விசாரணை

ராமநாதபுரத்தில் 13 தெரு நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை - போலீசில் பொதுமக்கள் புகார்

Published On 2020-01-10 09:33 GMT   |   Update On 2020-01-10 09:33 GMT
ராமநாதபுரத்தில் 13 தெரு நாய்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை ராமநாதபுரத்தில் சுப்பையன் வீதி என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிந்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்கு சுற்றிதிரிந்த தெரு நாய்களில் 10 நாய்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டன. யாரோ ஒரு மர்மநபர் நாய்களுக்கு உணவில் வி‌ஷத்தை கலந்து வைத்துள்ளார்.

அதனை தின்ற நாய்கள் அனைத்தும் காலையில் தெருக்களில் ஆங்காங்கே வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன. இந்த நிலையில் இன்று காலை சுப்பையன் வீதி பகுதியில் மீண்டும் 3 நாய்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டு இறந்து கிடந்தன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைவரும் திரண்டு ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் அடிக்கடி வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து யாரோ ஒரு மர்மநபர் நாய்களுக்கு சாப்பாட்டில் வி‌ஷம் வைத்து கொன்று வருகிறார். அவர் யார் என்று தெரியவில்லை? அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த மர்மநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News