செய்திகள்
கொரோனா வைரஸ்

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா

Published On 2020-06-25 10:55 GMT   |   Update On 2020-06-25 10:55 GMT
நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. நாகை மாவட்டத்தில் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. இதில் 90 பேர் குணமடைந்துள்ளனர். 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News