செய்திகள்
கொள்ளை

பேக்கரி கடையின் கதவை உடைத்து ரூ.9 ஆயிரம் திருட்டு

Published On 2020-09-27 11:29 GMT   |   Update On 2020-09-27 11:29 GMT
அவினாசியில் பேக்கரி கடையின் கதவை உடைத்து ரூ.9 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
அவினாசி:

அவினாசி-மங்கலம் ரோட்டில் நெல்லை பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த கடையை மைக்கேல் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடை உரிமையாளர் மைக்கேல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த மேஜை டிராயரை மர்ம ஆசாமிகள் உடைத்து அதிலிருந்த ரூ.9 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவினாசி போலீசில் மைக்கேல் புகார் செய்தார். அதன் பேரில் அவினாசி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது அதில் 25 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் முகமூடி அணிந்தபடியும், மற்றொருவர் முகமூடி அணியாமலும் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பெட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
Tags:    

Similar News