ஆன்மிகம்
அழகர்கோவில் சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் நடந்த கள்ளழகர் புறப்பாடு
மதுரை அழகர் கோவிலில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி கோவிலுக்குள் ஆடி வீதியை வலம் வந்தார்.
மதுரை மாவட்டம், அழகர் கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
10 நாட்கள் நடக்கும் இந்த சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி (திங்கள்கிழமை) மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி புறப் பாடுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ளழகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந் தருளும் வைபவம் கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவல் காரணமாக சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கோவில் உள் பிரகாரத்தில் ஆகம விதிப்படி ஆடி வீதி எனும் நந்தவனத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட மாதிரி வைகை ஆற்றில் நேற்று காலை கள்ளழகர் எழுந்தருளினார்.
தொடர்ந்து 6-வது திருவிழாவான இன்று (28-ந் தேதி) காலை 8 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தில் சைத்திய உபசார சேவை பக்தி உலாத்தல் நடந்தது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து 7-ம் நாள் திருவிழாவாக நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடாகி புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷி முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
8-ம் நாள் திருவிழாவாக வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும்.
தொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவாக மே 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அர்த்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
10-ம் நாள் திருவிழாவாக மே 2-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக் கப்பட் டுள்ளது.
முன்னதாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கோவில் கோட்டை வாசல் முன்பாக சூடம் ஏற்றி வழிபட்டு திரும்பி செல்கின்றனர்.
10 நாட்கள் நடக்கும் இந்த சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி (திங்கள்கிழமை) மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி புறப் பாடுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ளழகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந் தருளும் வைபவம் கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவல் காரணமாக சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கோவில் உள் பிரகாரத்தில் ஆகம விதிப்படி ஆடி வீதி எனும் நந்தவனத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட மாதிரி வைகை ஆற்றில் நேற்று காலை கள்ளழகர் எழுந்தருளினார்.
தொடர்ந்து 6-வது திருவிழாவான இன்று (28-ந் தேதி) காலை 8 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தில் சைத்திய உபசார சேவை பக்தி உலாத்தல் நடந்தது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து 7-ம் நாள் திருவிழாவாக நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடாகி புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷி முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
8-ம் நாள் திருவிழாவாக வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும்.
தொடர்ந்து 9-ம் நாள் திருவிழாவாக மே 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அர்த்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
10-ம் நாள் திருவிழாவாக மே 2-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக் கப்பட் டுள்ளது.
முன்னதாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கோவில் கோட்டை வாசல் முன்பாக சூடம் ஏற்றி வழிபட்டு திரும்பி செல்கின்றனர்.